கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னை 2000 மலேசிய வெள்ளிக்கு விற்ற எனது ஏஜென்ட் ...........


உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார் நடா .

நடராஜா இவர் பெயர். வயது ஒரு அம்பது இருக்கும். யாழ்ப்பாண தமிழர்தான் கனடா குடியுரிமை பெற்றவர். இவர்தான் என்னை இலங்கையில் இருந்து ஒரு சதம் காசு கூட வாங்காமல் கனடா கூட்டிட்டு போவதாக சொல்லி மலேசியாவிற்கு கூட்டி சென்றார். கனடா போனதன் பின்தான் முழுபணமும் தருவதாக பேச்சு.

மலேசியா சென்று எட்டு மாதமாகியும் என்னை அனுப்புவதாக தெரியவில்லை இந்த எட்டு மாதங்களில் பல சோதனைகள் நடந்தது, எனக்கு முன்பு சென்ற இருவர் என்னை விட ரொம்ப சின்ன பையன்கள் (12, 16  வயதில் இருவர்) அதில் ஒருவன் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்த இளம்பருதியின் அக்கா மகன்(சபேசன்) அங்கு அவர்கள் என்னைவிட பல மாதம் காத்திருந்தார்கள் பலன் இல்லை இதனால் நடா மீது நம்பிக்கையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது இருந்தும் நான் பல முறை எப்ப ஏத்துவீர்கள் என கேட்டுகொண்டே இருப்பேன். அப்போதுதான் ஒரு நாள் உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார்.... இதனால் மற்ற பையன்கள் கொஞ்சம் மனமுடைந்து போனார்கள் முதல் வந்த நாங்கள் இருக்க என்னை முதலில் ஏத்த போறார் போல இருக்கு என..........

நானும் அன்று ஊமை பாசை பழக தங்கியிருந்த ரூமில் இருந்து ஓரிடத்துக்கு நடாவினால் அழைத்துச் செல்லப்பட்டேன் அங்கு ஒரு 35 மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார் அவரின் தம்பிதான் ஊமை என்று எனக்கு சொல்லி இருந்தார். சில நாள் அவர்கள் வீட்டில் இருந்து ஊமை பாசை படித்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த பெண் கோலாலம்பூரில் இருந்து ஒரு ரெயிலில் ஏற்றி ஒருமணி நேரம் பயணம் செய்து ஒரு கிராமத்துக்கு கூட்டிசென்றார் சிறு மலை தொடர்கள் இருந்தது அந்த இடத்தில். இடத்தின் பெயர் எனக்கு நினைவில் இல்லை அதை நான் கவனத்தில் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

அந்த பெண், அவர் கணவன், அவருடைய ஊமை தம்பி, அவருக்கு மூன்று பிள்ளைகள்(குட்டீஸ்) ஒன்று பெண் குழந்தை, மற்ற இருவரும் பையன்கள்.


காலையில் எல்லோரும் புறப்பட்டுவிடுவார்கள் மூன்று பிள்ளைகளையும் பாடசாலை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள் அங்கு ஒரு ரூமில்(Room) அந்த வாய் பெசமுடியாதவர் எப்போதும் ஒரு கணணி முன்னால் இருந்துகொண்டு ஆபாச படங்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்  என்னையும் அமர்ந்து பார்க்க சொல்லுவார். அப்பப்ப அவரின் சைகைகளில் எதாவது சொல்லுவார் நானும் ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக பார்த்து நானும் செய்து பார்த்துக்கொண்டேன் இப்படியாக இரண்டு நாட்கள் சென்றது காலையில் அவர்கள் செல்லும் போது சில வேலைகள் சொல்லிவிட்டு செல்வார்கள், துணி துவைக்கும் இயந்திரத்தில் துணிகள் இருக்கிறது அதை எப்படி இயக்குவதென சொல்லிகொடுத்து செய்யசொன்னார் செய்தேன், சமைக்க தெரியுமா என்றார்கள்......ஓம் என்றேன்.... அப்படியே சமைத்து வைக்கவும் சொன்னார்கள் சமையல் சாமான்கள் எங்கு இருக்கிறது என எல்லாம் காட்டினார். பல மாதங்களாக நடா எதை வாங்கி கொடுத்தாரோ அதை அரை குறையாக சாப்பிட்டு சாப்பிட்டு இருந்த எனக்கு நல்ல சந்தர்ப்பமாக விரும்பியதை சமைத்து சாப்பிடுவது இருந்தது.


பத்து நாட்கள் தாண்டி இருந்தது காலையில் எழுந்து அந்த குழந்தைகளுக்கு பாடசாலை உடை அணிந்து விடுவது உணவு எடுத்து வைப்பது, என சிறு சிறு வேலைகள், அதன் பின் ஊமை தம்பிக்கு உணவு தயாரித்து கொடுப்பது ,வீட்டை கூட்டி விடுவது, உடைகளை தோய்ப்பது, பின் அவர் படம் பார்த்துகொண்டிருக்கும் ரூமுக்குள் போய்  எதாவது கதைக்கிறாரா அவரையே பார்த்துகொண்டிருப்பேன் கதைத்தால் அவற்றை செய்து பழகுவது. அவர்கள் வேலை முடிந்து வந்ததும் பிள்ளைகளை உடை மாற்றி விடுவது, பின் அவர்களுக்கு விளயாட்டுகாட்டுவது என எனது நாட்கள் நகர்ந்தது......... ஆனாலும் எதையும் கற்றதுபோல திருப்தி எனக்கு இல்லை...

அன்று காலை வழமைபோல அவர்கள் சென்றபின் அவர்கள் வீட்டு தொலைபேசியில் இருந்து நடாவின் தொலைபேசிக்கு அழைத்தேன் அது நிறுத்தி வைக்கபட்டிருந்தது அதன் பின் தங்கி இருந்த ரூமுக்கு அதாவது அந்த வீட்டில் எங்களுக்கு ஒரு ரூமை வாடகைக்கு கொடுத்துவிட்டு இருக்கும் ஒரு அம்மா (ஜெயா) அவருக்கு தொலைபேசி எடுத்தேன். சபேசனிடம் பேசவேண்டும் நான் கரன் பேசுகிறேன் என்றது மட்டும்தான்.........என்ன தம்பி உங்க நடா சொல்லாமல் ஓடிப் போய்டார் எனக்கு மூன்று மாத ரூம் வாடகை கொடுக்கவில்லை இங்க இருக்கிற இரண்டு பையன்களையும் அப்படியே விட்டுட்டு போயிட்டார் அவங்களுக்கு யார் சாப்பாடு கொடுக்கிறது? என்றார். நீ எங்கே இருக்கிறாய் என்றார் ..........எனக்கு இடம் தெரியாது இப்படி ஊமை பாசை பழக வந்தேன் என்று சொன்னேன்....... சரி நீ உடனே இங்கே புறபட்டு வா என்றார் .....நானும் சரி இப்போது முடியாது நாளைக்கு வீட்டில் இருப்பவங்க வந்ததும் சொல்லிவிட்டு வாறன் என்றேன் அப்படியே சபேசனுடனும் கதைத்தேன் அவனும் அழாத குறையாக அண்ணா நடா நம்மள எமாத்திப்போட்டார் என்று சிணுங்கினான் ........வருவார் என்று நினைக்கிறேன் என்னை ஊமை பாசை பழக சொன்னார் தானே ஒருவேளை வாடகை காசு இல்லாததால சொல்லாம போயிருப்பார் எங்காவது போய்ட்டு காசு எடுத்துட்டு வருவாரோ தெரியாதே என்று நான் என் பங்குக்கு சமாதான படுத்தினேன் எனக்கு அந்த நேரம் எதுவும் புரியவில்லை குழப்பமாகவே இருந்தது .........சரி நான் நாளைக்கு வாறன் என்று சொல்லி இணைப்பை நிறுத்தினேன்.

இரவு வீட்டு பெண் வந்ததும் நடந்ததை சொன்னேன்.... ஏன் நடா கனடா போறதை உங்களுக்கு சொல்லல்லையா என்று கேட்டார்...........தலை சுத்தியது ......இல்லை என்றேன்........... எனக்கு அன்று உன்னை வேலைக்கு கொண்டுவந்து விடும்போதே சொல்லிதானே விட்டுட்டு போனார் என்றார்.......... வேலைக்கா??? என்னை????????? அதிர்ந்தது ஒரு கணம் ... நான் வேலைக்கு வரவில்லை ஊமை பாசை பழகத்தான் வந்தேன் என்றேன் ......என்ன தம்பி விளையாடுறீங்க உங்களை வேலைக்கு கொண்டுவந்து விட்டுட்டு பாவம் விசா இல்லை என்று சொல்லி அதுக்காக என்னிடம் 2000 வெள்ளி பணமும் வாங்கி போயிட்டார் என்றார்.... ஒருபுறம் கண்கள் கலங்கியது இன்னொருபுறம் நடா மீது கோவம் உச்சத்தில் இருந்தது.... அதெப்படி என்னை வேலைக்கு போட்டுவிட்டு அவர்  பணம் எடுக்க முடியும் அவர் என்னை வெளிநாடு அனுப்புவதாக சொல்லித்தானே இலங்கையில் இருந்து கூட்டிவந்தார் .......... நீ விசா இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்ட படுவதாக சொன்னார் சம்பளம் ஒன்றும் கொடுக்க வேண்டாம் தங்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் போதும் என்று சொன்னதால்தான் பணம் கொடுத்து உன்னை வேலைக்கு சேர்த்தேன் என்றார். இப்படியெல்லாம் ஒரு அனுபவம் கிடைக்குமென நான் எப்போதாவது நினைத்ததில்லை.......

அட பாவிங்களா வெளிநாடு போக சென்ற என்னை 2000 வெள்ளிக்கு விற்ற பெருமை நடாவை சேரும்......... யார் பெத்த பிள்ளையை யார் விற்கிறது???????

சரி இனி எனக்கு இங்கு இருக்க முடியாது நான் நாளைக்கு போக வேண்டும் என்றேன்..... அப்படி போக முடியாது நாங்கள் 2000 வெள்ளி பணம் கொடுத்திருக்கிறோம் அதை தந்துவிட்டு போகசொன்னார், இல்லை நான்கு மாதம் அந்த பணத்துக்கு வேலை செய்ய சொன்னார் மறுத்தால் போலிசுக்கு சொல்லி விசா இல்லாமல் இருபதற்கு உள்ளே போட்டுவிடுவதாக பயமுறுத்தினர்............... பேசினால் விபரீதம் என விளங்கியது நாலு மாதம் வேலைசெய்வதாக சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தேன்...

வழமை போல மறுநாள் அவர்கள் வெளியாகியதும் எப்போதும் ஊமைத்தம்பி கணணி மேசையில் பணம் வைத்து இருப்பார் அவர் சாப்பிட போகும் பொது அதில் 100 வெள்ளி பணத்தை எடுத்துகொண்டு எனது பையையும் எடுத்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன் வழியில் யாரவது தமிழர்கள் வருகிறார்களா என அலசிக்கொண்டே வந்தேன் பொட்டு வைத்துகொண்டு வந்த பெண்ணிடம்  கோலாலம்பூர் போகும் பஸ் எங்கே என கேட்டு அதன் படி அங்கு போய் சேர்ந்தேன் பின் பழைய வீட்டு அம்மாவுக்கு தரிப்பிடத்தில் இருந்த தொலைபேசியில் இருக்கும் இடத்தை சொன்னேன் காத்திருக்க சொல்லி வந்து அழைத்து போனார் ......... 



ரூமுக்கு போனதும் அந்த பெண் தன் பிரச்சனைகளை திணித்தார் 3 மாத வாடகை தரவேண்டும் இப்போது சாப்பாடு கொடுக்கும் காசும் தரவேண்டும் என்றார் ........... வேறு வழியில்லாமல் அவரிடமே எனக்கு வேலை ஒன்று பார்த்து தர சொன்னேன் அதன் படி ஒரு கார் கழுவும் இடத்தில் வேலைக்கு சேர்ந்தேன் , அப்படியே சபேசனுக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை கிடைத்தது மற்ற சிறுவனை அவர்கள் உறவினர்களுடன் பேசி இலங்கைக்கு அனுப்பி வைத்தோம்.........




நான் வீட்டுக்கு என்னை விற்ற பிரச்சனைகளை சொல்லவில்லை நடா விட்டுட்டு போனதை சொன்னேன் வேறு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் சொன்னேன் அவர்களையும் கவலைபடுத்தி எதுவும் ஆகபோவதில்லையென நன்றாக புரிந்தது ....... வீட்டில் இருந்து இன்னொரு ஏஜென்ட்டிடம்  பேசி ஒழுங்கு பண்ணினார்கள் ......அவர் வந்து என்னை அழைத்தார் ,சபேசனுக்கும் வீட்டில் வேறு ஏஜென்ட் பார்த்து கொண்டிருப்பதாகவும் என்று சொன்னதால் அவனுக்கும் வேலை செய்யும் உணவு விடுதியில் தங்கும் வசதி இருப்பதால் இருவரும் ரூமை விட்டு வெளியாகி பிரிந்து போனோம்.................

மற்ற ஏஜென்ட்.............அவர் மட்டும் என்ன சளைத்தவரா அடுத்த பாகம் ஆரம்பமாச்சு...............................

திணறித்தான் போகிறேன் நானே


நுதல் நக்கும் கார் குழலே - உனை 

அவள் கோதும் வார் விரல் அழகே 
இதைக் கண்டவர் எழுதுவர் கவியே 

மதி வதனம் பூத்த செவ்விதழே - உன் 
தேன்சுளை சுவைத்திட நா ஊறுதே 
நாளும் நீ இசைந்திட மனம் ஏங்குதே

கதை பேசும் மின் கயல் விழியே - உனை
தினம் கண்டும் தித்திப்பு புதிதே
திணறித்தான் போகிறேன் அதில் நானே

மெய் காய்த்துத் திமிரும் பருவக் கனியே – உனை
கண்டதும் விழுங்கிட உமிழ் சுரக்குதே
விரல்களும் தவழ்ந்திடத் துடிக்குதே

கனி தாங்கி விழுந்திடும் கொடியினை போலே – உன்
நடையினில் இடையதன் முறிவுகள் நளினமே
இதைக் கான கண் கோடி எனக்கும் வேண்டுமே

நின் அழகினை முழுங்கிடும் என் கண்களை கண்டு – உன்
கால் விரல்களால் போட்டிடும் கோலம் தாஜ்மகாலே!!!

தமிழில் பேசியதால் பாதை மாறிய என் வாழ்க்கை...........



பாடசாலை பரீட்சை காலங்களுக்கு பிறக்கு அன்றுதான் என் மனம் அப்படி ஒரு பதட்டமான நிலையில் இருப்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது இன்று அந்த சம்பவம் நடந்து ஒரு பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் என் மனதில் அழியாத நினைவாக அந்த சம்பவமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மலேசியாவில் ஒரு மூன்று வருடங்கள் புதுவிதமான அனுபவங்களோடு ஓடிப்போனது பல ஏமாற்றங்களுக்கு பின் மீண்டும் ஒரு ஏஜென்சி பேசபட்டது. கனடா போக புறபட்ட நான் ஒசாமாவின் இரட்டைகோபுர தாக்குதலால் மலேசியாவில் இருந்து(மலேசியா கடவுசீட்டுக்கு) போகும் பிரயாணிகளுக்கு (முஸ்லீம் நாடுகளுக்கு) “Entry visa” முறை தடை செய்யபட்டதால் பிரான்ஸ் போகலாம் என முடிவெடுத்து அதற்கு தயாராகிகொண்டிருந்த நேரமது

எனது கடவுச்சீட்டு(Passport)  முடிவடைந்த நிலையில் இருந்தது அதற்கு காசு கொடுத்து விசாக்கள் குத்தபட்டது. ஏஜென்சியுடைய திட்டம் என்னவென்றால் நான் இலங்கை கடவுச்சீட்டு பாவித்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லவேண்டும் அங்கு வெளியாகாமலே போலி மலேசியா கடவுச்சீட்டை பாவித்து பிரான்ஸ் போவதுதான். மலேசியா தமிழர் ஒருவர் அவருடைய பெயரிலேயே என் படம் போட்டு No 2 மலேசியா கடவுச்சீட்டு எடுத்துகொண்டு என் கூடவே வந்தார் அவர் தனது உண்மை கடவுச்சீட்டு பாவித்து “Boarding pass” எடுத்து கொடுத்தார் நான் எனது இலங்கை கடவுச்சீட்டை அவரிடம் கொடுத்துவிட்டு மலேசியா கடவுச்சீட்டையும் அவருடைய “Boarding pass” யும் எடுத்துகொண்டு என்னை கூட்டி போக வந்த பெண்னோடு(ஓட்டி) தயாராக நின்றேன்.

ஏஜென்சி மூலம் வெளிநாடு போபவரை கூட்டு செல்பவர்களை ஓட்டி என்பார்கள். இந்த ஓட்டி எஜென்ட்டுடைய காதலிகளில் ஒருவர்.

நானும் அந்த மலேசியா பெண்ணும் சேர்ந்து போனால் என்னையும் மலேசியா பையன் என சுலபமாக நம்பவைக்க முடியுமென ஏஜென்சி நம்பினார் அதனால் அந்த பெண்ணையே முதலில் கடவுசீட்டை கொடுக்கும் படியும் இருவரும் கைகோர்த்து அணைத்துக்கொண்டு காதலர்கள் போல போகவேண்டும் என்பதுதான் திட்டம். அது போலவே இருவரும் சென்றுகொண்டிருந்த போது அந்த பெண் கொஞ்சம் இருங்க அந்த “Gate” ல  நிக்கிறவன் தான் போனமுறை என்னை பிடித்தவன் இப்போ இரண்டுபேரும் ஒன்றாயக போனால் கண்டிப்பாக பிடித்துவிடுவான் என்றாள் அப்படியே திரும்பி சென்று ஏஜென்டுக்கு தொலை பேசி அழைப்பு எடுத்தோம் அவரும் என்ன செய்வதென தெரியாமல் இறுதியாக என்னை தனியாக முயற்சி செய்ய சொன்னார். நானும் போய்விட்டால் உதவியாக இருக்குமெனவும்  டிக்கெட் காசு வீணாக கூடாதென அவளை முதலே தனியாக போக சொல்லிவிட்டார்.

இதுக்காகவே பல மாதங்களாக மலாய் மொழியில் பல கேள்விகள் எழுதி கொடுத்து பாடமாக்க சொல்லி இருந்தார் நானும் அதை நன்றாகவே பாடமாக்கி வைத்திருந்தேன் அந்த நம்பிக்கையில் தனியாகவே சென்றேன்

வாசலில் இருந்த சீனன் என்னை மலாயில் சில கேள்விகள் கேட்டார் நானும் நன்றாக சொன்னேன் சரியென தலை அசைத்து உள்ளே போக சொன்னார் எல்லாம் சரியாகி விட்டது என்ற சந்தோசத்தோடு உள்ளே செல்ல முனைந்த பொது உட்பக்க வாசலில் ஒரு மலேசியா தமிழன் சிரித்துக்கொண்டே என்னையும் மலேசியா தமிழன் என்று நினைத்து பேச தொடங்கினார் நானும் ஒரு இரு வசனம் பேசியதுமே உங்க தமிழ் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்றார் இல்லையே என்றேன்... உடனே அவர் நீங்கள் மலையாளி இல்லை இலங்கை என்றார் ... உடனே சீனனிடம் ஏதோ சொன்னார் அந்த தமிழன் .. சீனனும் என்னை அழைத்துக்கொண்டு போனார் என்னை அவர் பின்னால் வர சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினார்

எனக்கு புரிந்துவிட்டது இனி எதுவும் சரியாக வராது என நினைத்துகொண்டு ஒரு திருப்பத்தில் அந்த சீனனின் கண்ணில் இருந்து நான் மறைந்துவிட்டேன்

என் தமிழே எனக்கு எதிரியானது... அந்த மலேசியா தமிழனை திட்டிக்கொண்டே இருந்தேன்.. அந்த இடத்தில் அவருக்கு பெசவேண்டிய தேவையே இல்லை தன் நாட்டு தமிழன் என்ற எண்ணத்தில் சும்மா பேச்சு கொடுக்க போய் என் வாழ்கையின் பாதையை மாற்றிய பங்கு அவருடையதே...

பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் “பாத் ரூம்” சென்று எனது உடை ,தலை இழுக்கும் முறை எல்லாம் மாற்றி மலேசியா கடவுச்சீட்டை கிழித்து போட்டு தண்ணீரை அழுத்தினேன் ,பிரான்ஸ் போனால் தேவைப்படுமென எடுத்து வைத்திருந்த குளிர் “கோர்ட்” டையும் போட்டுகொண்டு வெளியில் வந்தேன் என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியகூடாதென்ற எண்ணத்தில். நான் இப்படி செய்வதற்கு காரணம் இதுபோலவே அந்த ரூட்டில் அடிபட்டு இன்னொருவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் மூன்று நாட்கள் இருந்த அனுபவத்தை முன்பு என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார் அது எனக்கு உதவியாக இருந்தது அதே நேரம் தெம்பையும் கொடுத்தது.

ஏஜென்ட்டுக்கு தொலைபேசியில் நடந்த விடயத்தை சொன்னேன் என்னை சீனன் பிடித்ததை கண்டதுமே என்னை கூட்டிவந்த மலேசியா தமிழர் என் கடவு சீட்டையும் கொண்டு சிங்கபூருக்கு உள்ளே சென்றுவிட்டார். ஓட்டியோ இந்த சந்தர்பத்தை விட்டால் கிடைக்காதென தனியாக பிரான்ஸ் நோக்கி பறந்துவிட்டார். அதனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்னை அப்படியே அங்கே சுத்திகொண்டு திரியச் சொன்னார்

நடந்தது நடந்துவிட்டது என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற முடிவோடு வேறு வழி இல்லாமல் அவர் சொன்னதுபோல சுத்த ஆரம்பித்தேன் மிக பெரிய விமான நிலையம் எப்போதும் விமானம் தரை இறங்கிக்கொண்டே இருக்கும் அதனால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது அதனால் எனக்கு சுலபமாக தப்பித்துகொள்ள முடிந்தது.

இரண்டு “Terminal” இருந்தது இரண்டுக்கும் இடையில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இரண்டு சிறிய பெட்டிகளை கொண்ட மின்புகையிரதம் எப்போதும் ஓடிகொண்டே இருக்கும் இதன் உதவியோடு இரண்டு பக்கமும் இங்கு சில மணி நேரம் , மற்ற  “Terminal” ல் சில மணி நேரம் என செலவிட்டேன்

என்னோடு வந்த ஓட்டி கையில்தான் பணம் எல்லாம் என் கையில் பணம் இல்லை பசிக்க தொடங்கியது என்ன செய்வதென தெரியவில்லை “Sri Lankan Airlines” விமானங்களில் எது எப்போது எந்த “Gate” ல் இலங்கை நோக்கி புறபடுகிறது என பார்த்து அந்த “Gate” வாசலில் இலங்கை செல்ல தயாராக இருக்கும் ஆட்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன் அதில் தமிழர்களா பார்த்து சிரித்தேன் அவர்களும் சிரித்தால் அவர்கள் பக்கத்தில் இடம் இருக்கிறதா என பார்த்து அமர்ந்துகொண்டேன் பின் அவர்களுடன் பேச்சு கொடுத்தேன் சிறிது நேரம் பேசியதும் என் நிலைமையை சொன்னேன் அவர்களாக என்மேல் பரிதாபபட்டு எப்படி இங்கிருந்து போக போகிறீர்கள் இது என்ன கொடுமை எனவும, சிலர் என்னை சமாதன படுத்தினார்கள் அதில் சிலர் சாப்பிடீர்களா என கேட்டு உணவு வாங்கி கொடுத்தார்கள் இப்படியான ஒரு சூழ்நிலை என் வாழ்கையில் இதை தவிர வேறு எந்த இடத்திலும் வந்ததில்லை. நான் இந்த விமான நிலையத்தில் பத்து நாட்கள் இதுபோலவே இருக்க நேர்ந்தது அதுவரை என் உணவுக்கான கையேந்தல் தொடர்ந்தது.

அந்த பத்து நாளும் பழக்கமில்லாத A/C குளிரும் எந்நேரமும் போட்டிருந்த உடையின் இறுக்கமும், தூங்க முடியாத நிலையும் ஒரே இடத்தில் தூங்கினால் பிடிபட்டுவிடுவேனா என்ற பயமும், சரியான உணவின்மையும் எனக்கு மிகவும் புதிய அனுபவமாக இருந்தது

அந்த பத்து நாட்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தேன் அதில் ஒருவர் என் நிலைமையை கண்டுகொள்ளவேயில்லை என்னை வைத்து அவருடைய “Transit” நேரத்தில் சிங்கபூர் விமான நிலையத்தை சுத்திகாட்ட சொல்லி என்னை பயன் படுத்திகொண்டார் ஆனால் அன்று நான் சாப்பிடவில்லை என தெரிந்தும் என்னிடம் பணம் இல்லை என்று தெரிந்தும் எதுவும் வாங்கி கொடுக்காமல் சென்றார் இன்றுவரை இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று நான் அவரை நினைத்ததுண்டு..

நான் ஒரு “பாத்ரூமுக்கு” சில நாளாக போய் வருவதை அங்கு சுத்திகரிப்பு வேலையில் இருக்கும் ஒரு மலேசியா தமிழர் கண்டு விட்டார் நான் “பாத்ரூம்” உள்ளே வந்ததும் என் பின்னே அவரும் வந்து என்னை பற்றி விசாரித்தார் அவரிடம் என் நிலைமையை சொன்னேன் மிகவும் மனமுடைந்து போனார் இறுதி மூன்று நாட்களும் அவர் பகலில் வேலையில் இருக்கும் போது அவருக்கு கொடுக்கும் உணவை எனக்கு கொடுத்துவிட்டு அவர் வெளியில் செல்லும்போது சாப்பிடுவதாக சொன்னார். இது சிங்கப்பூர் இங்கு நாங்கள் இப்படி செய்வது தெரிந்தால் எங்கள் வேலை போவதோடு தண்டனையும் உண்டு பின் எங்களை இந்த நாட்டுக்குள் விட மாட்டார்கள் இருந்தாலும் உங்களுக்கு உதவ வேண்டும் போல இருப்பதாக சொல்லியே உதவிகள் செய்தார்.

பத்தாவது நாள் ஏஜென்டுடைய நண்பர் ஒருவர் அவரும் ஏஜென்ட்தான் எனது இலங்கை கடவுச்சீட்டுக்கு நான் சிங்கபூர் போனது போலவும் மீண்டும் இப்போதுதான் விமான நிலையத்துக்குள் வந்தது போல எல்லா சீல்களையும் களவாக அடித்துக்கொண்டு மலேசியா செல்வதற்கான டிக்கெட்டையும் கொண்டு வந்து பாத்ரூமில் கொடுத்தார். அவருடன் பேசாமல் சிறிது இடம்விட்டு  பின் வர சொன்னார் ,அப்படியே மீண்டும் மலேசியா போய்ச் சேர்ந்தேன்........... 


இதன் பின்னும் பல இதுபோன்ற அனுபவங்கள் ... அதில் ஒன்று விசா இல்லாததால் கோவில் பூசாரியாக வேசமிட்டு ஒரு கோவிலில் சிலகாலம் இருந்தது...............

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே 
என் வேகத்தை கூட்டவிடு

மதங்களை திணிக்காதே
மனிதத்தை உணர விடு

கலாச்சாரத்தை காக்க சொல்லாதே
இளமையை உணரவிடு




மூடநம்பிக்கையை விதைக்காதே
அறிவை வளரவிடு

உன் முடிவை நம்பச்சொல்லாதே
தேடலை பெருக்கவிடு

உன் பாதையில் போகச்சொல்லாதே
எனக்கான பாதையை உருவாக்கவிடு

உன் ரசனையில் மகிழச்சொல்லாதே
என்னை ரசிக்கவிடு

உன் லட்சியத்தை சுமக்கசொல்லாதே
என் லட்சியத்தை அடையவிடு

என்னை புகழாதே
என்னை அறியவிடு

என் வாழ்கையை நீ வாழாதே
என்னை வாழவிடு.